அவிநாசி, மார்ச் 2- அவிநாசி அருகே உப்பிலி பாளையம் மக்கள் போராட்டம் நடத் தியதையடுத்து மீண்டும் பேருந்து இயக்கப்படும் என உறுதியளிக் கப்பட்டது. அவிநாசி ஒன்றியம், உப்பிலி பாளையம் ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், சோமனூரில் இருந்து, கருமத்தம்பட்டி, கிட்டாம்பாளை யம், உப்பிலிபாளையம், கருவலூர் வழியாக அரசு பேருந்து இயக்கப் பட்டது. இப்பகுதி கிராம மக்க ளின் வசதிக்காக எட்டு நடை இயக்கப்பட்ட அப்பேருந்தின் இயக்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரண்டு நடையாக மாற் றப்பட்டது. இதனால் உப்பிலிபாளையம் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக் கப்பட்டனர். இதையடுத்து அரசு போக்குவரத்து கருமத்தம் பட்டி கிளை மேலாளரைச் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் பல மாதங்களாகப் போக்குவரத்து குறைபாடு தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆவேசமடைந்த பொதுமக்கள் உப்பிலிபாளை யத்திற்கு வந்த பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரி கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக உப்பிலி பாளையம் கிராமப் பகுதிக்கு ஆறுமுறை பேருந்து இயக்கப் படும் என கூறப்பட்டது.