tamilnadu

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர், மார்ச் 4- திருப்பூர் பழைய பேருந்து நிலை யத்தில் உள்ள கடைகளை மார்ச் 8ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலை யத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான வாட கையை மாநகராட்சி நிர்வாகம் வசூ லித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு மாநகராட்சி நிர்வா கம் கடை வாடகையை 100 சதவிகி தம் உயர்த்தி அறிவித்ததாக கூறப்ப டுகிறது. இதை எதிர்த்து பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத் துள்ள 63 கடை உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த னர். இதனால், வாடகை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடை கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.  இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையா ளர்கள் 50 சதவிகிதம் வாடகை கட்டண உயர்வை மாநகராட்சிக்கு செலுத்த வும், மார்ச் 8 ஆம் தேதிக்குள் இந்த கடை களை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொ டர்ந்து மாநகராட்சி சார்பில் இது குறித்து அறிவிப்பு பிரசுரங்களை சம் பந்தபட்ட கடை உரிமையாளர்க ளுக்கு 2 நாட்களுக்கு முன்பு வழங்கப் பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று மாநகராட்சி உதவி ஆணையர் கண் ணன், உதவி ஆணையர் தங்கவேல் ராஜன் ஆகியோர் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று மார்ச் 8ஆம் தேதிக்குள் கடைகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என அறி வுறுத்தினர்.  மேலும், வாடகை கட்டண உயர்வை நிலுவையில்லாமல் முழு மையாக செலுத்துபவர்களுக்கு முன் னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.