tamilnadu

தடை உத்தரவு வெறிச்சோடிய அவிநாசி

அவிநாசி, மார்ச் 25- அவிநாசி பகுதியில் செவ்வாயன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமுலுக்கு வந்தது. கொரோனே வைரஸ் காரணமாக  மார்ச் 24 மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்த நிலையில்  சூப்பர் மார்க்கெட், டீக்கடை உள்ளிட்ட கடைகள் மாலை 6 மணிமுதல் அடைக்க தொடங்கினர். இதைத்தொடர்ந்து அரைமணிநேரத்தில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனப் போக்குவரத்து குறைந்தது. இதையடுத்து அவிநாசி பல கிராம பகுதிகளில் தானாக முன்வந்து வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக மளிகைக் கடைகளை அடக்க தொடங்கினர்.  இந்த நிலையில் மார்ச் 25 ஆம் தேதி அவினாசி பகுதிகளில் உள்ள சில மளிகை கடைகள் இறைச்சி கடைகள் மற்றும் செயல்படத் தொடங்கினர். கடைக்கு வருபவர்களுக்கு கைகளைக் கழுவவும், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும் என அறிவுறுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி சில மளிகை கடை பகுதிகளில் வெள்ளை நிறத்தில் கோடு போட்டு கட்டத்திற்குள் நான்கு பேர் மட்டும் நீக்குமாறு அறிவுறுத்தி வியாபாரத்தை தொடங்கினர்.