அவிநாசி, மே 14- அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சி பகுதி யில் ஐந்தாவது கட்டமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட நடுவச்சேரி ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊராட்சி யிலுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசம் வழங்குதல், சமூக இடைவெளியை பின்பற்ற குடைபிடித்து விழிப்புணர்வு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்கள் குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் ஐந்தாம் கட்டமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலை வர் கே.சி. வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் துணைத் தலைவர் எஸ். விஜய லட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கே. ரங்க சாமி, கே. வினோத் பிரபாகர், ஊராட்சி செயலாளர் மணிகண்டன் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.