tamilnadu

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

அவிநாசி,  மார்ச் 4- அவிநாசியில் முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி அருகே பழங்கரை வயக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அவினாசியப்பன் (67). இவ ருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனமுடைந்த இவர், வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சிமருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து, அருகில் இருந்த வர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

;