tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

அவிநாசி, ஜூன் 4- திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் செம்பிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபம் அருகில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு செல்லும் குடிநீர் குழாய், உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி  வந்தது. இதனால் சாலைகளில் நீர் தேக்கம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தீக்க திர் நாளிதழில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் புத னன்று குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

;