tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி சேவூர் அருகே பள்ளியிலிருந்த மின்மாற்றி இடமாற்றம்

 அவிநாசி, நவ. 4-  சேவூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் அபாயகரமாக அமைக் கப்பட்டிருந்த மின்மாற்றி குறித்த செய்தி தீக்கதிரில் வெளியான நிலை யில் அதனை இடம் மாற்றி அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. அவிநாசி ஒன்றியம், பாப்பாங் குளம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சலிங் கம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், அரசு உயர் நிலைப்பள்ளியும் அருகருகே அமைந்துள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 300 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத் திற்குள் அமைக்கப்பட்டிருந்த மின் மாற்றியால் மாணவர்கள் அச்சத்து டன் பள்ளிக்குச் சென்று வந்தனர். குறிப்பாக மழை காலங்களில் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் அதன் அருகே உள்ள மின்மாற்றியாலும் மாணவ, மாணவியர்களுக்கு ஏதா வது அபாயம் ஏற்பட்டு விடுமோ என அச்சத்துடன் தங்களது குழந்தை களை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்களும் தெரிவித்திருந்த னர்.
தீக்கதிர் செய்தி எதிரொலி
இந்நிலையில் பள்ளியில் உள்ள மின்மாற்றியை பள்ளி வளாகத்தி லிருந்து அகற்றி, வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என தீக்கதிர் நாளிதழில் கடந்த (அக்.26) சனிக் கிழமையன்று செய்தி வெளியிடப் பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மின்வாரியத்தினர் பள்ளி வளாகத் திற்கு வெளியே மின்மாற்றியை இடம் மாற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. மற்றும் கிரேன் இயந்தி ரம் கொண்டு பள்ளிக்கு எதிர்புறம் உள்ள சாலையின்ஓரமாக மின்மாற் றியினை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.