tamilnadu

தூய்மைப்பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார்

அவிநாசி, ஜூன் 18- அவிநாசி அருகே தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த தூய் மைப்பணியாளர்கள், தங்களை வீடியோ எடுத்து தவறாக சித்தரித்த இளைஞர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி அவிநாசி காவல் நிலையத்தில் புகார் தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக திம்மனையாபாளையத்தை சேர்ந்த கருப்பன் மகன் வீராசாமி, 20க்கும் மேற்பட்ட தூய்மைப்ப ணியாளர் பெண்களை வீடியோபடம் பிடித்துள்ளார்.  இதனை டிக் டாக் செயலி மூலம் தவறான வார்த்தை கள் பயன்படுத்தும் பாடலை இணைத்துள்ளார். இதனைக்  கண்ட  தூய்மைப்பணியாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வீராசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  புதனன்று அவிநாசி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளனர். இப்புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

;