திருப்பூர் பின்னலாடை தொழில் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு, வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை தொடர்வதற்கு எங்களைப் போன்ற தொழில் துறையினரும் ஒரு காரணம். குறிப் பாக உற்பத்தியாளர் அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளிடம் இங்குள்ள நிலைமையை பற்றி உண்மையான விவரங்களை முழுமை யாக கொண்டு செல்வதில்லை. அண்மையில் கோவை, திருப்பூரைச் சேர்ந்த ஜவுளி தொழில் முன்னணி அமைப்பி னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மனை இங்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினர். ஆனால் இங்குள்ள சிறு, குறு, நடுத் தர தொழில் துறையினர் சந்திக்கும் நெருக் கடிகளை பற்றியோ, அவர்களது பிரச்சனை களை பற்றியோ அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. அதேபோல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இங்கு வந்து சென்ற போது திருப்பூ ரைப் போல் பின்னலாடை தொழில் நகரங்களை உருவாக்குவோம் என்று கூறிச் சென்றார். இப் போதைய நிலையில் திருப்பூர் இருப்பது பற்றி அவரது கவனத்திற்கு தொழில் அமைப்புகள் கொண்டு செல்லவில்லை. முன்பெல்லாம் திருப்பூர் தொழில் துறைக்கு பிரச்சனைகள் நெருக்கடி ஏற்படும் போது ஒரு சில மாதங்களில் சரியாகிவிடும்,
தீபாவளிக்கு பிறகு இயல்புநிலை திரும்பிவிடும், புத்தாண் டுக்கு பிறகு பொங்கலுக்கு பிறகு இயல்பு நிலைக்கு வந்து விடும் என்று நன்னம்பிக்கை யோடு சொல்லி வருவோம். ஆனால் இப்போது அப்படி சொல்ல முடியவில்லை. திருப்பூர் பின்ன லாடை தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள், நெருக்கடி ஆகியவற்றிலிருந்து எப்போது மீளும் என்றே தெரியவில்லை. எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் சுமார் 450 பேர் இப்போது இந்த தொழிலில் இல்லை. மத்திய, மாநில அரசுகள் திருப்பூருக்கு என்ன தேவை என்பதை, அவர்களே நேரடியாக கவனித்து, தொழில் துறையினருடன் கலந்து ஆலோசனை செய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சு, நூல் விலையை சீராக வைத்திருப்பதற்கு உரிய தலையீடு செய்ய வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.
விவசா யத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு வழங்கி வரும் இந்த ஜவுளி தொழிலுக்கு உரிய வசதிகளை செய்து தர அரசுகள் முன் வர வேண் டும். குறிப்பாக வேதாரண்யம் அருகே நாங்கள் உருவாக்கிய பின்னலாடை தொழில் பேட்டையில் சுமார் 120 கோடி முதலீட்டில் 12 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். விவசாயம் இல்லாத, வேறு தொழில் வாய்ப்பு இல்லாத, அந்த பகுதியில் இளைஞர்கள், பெண்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்று மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளனர். அங்கு தொழில் நடத்துவது எங்க ளுக்கு மனநிறைவைத் தருகிறது. இதுபோன்ற விஷயங்களுக்கு அரசுகள் உரிய ஊக்குவிப்பு வழங்க வேண்டும். திருப்பூர் தற்போதுள்ள சூழலில் தொழில் மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடத்துவது அனைத்து தரப்பினரின் கவ னத்தையும் ஈர்க்கும். இதில் முன் வைக்கப்படும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதன் மூலம் திருப்பூர் மறுமலர்ச்சி பெறுவதற்கு உதவ வேண் டும். இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம். இவ்வாறு எம்.பி.முத்து ரத்தினம் கூறினார்.