tamilnadu

img

தமிழக உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கர்நாடக விவசாய சங்கத் தலைவர்களுடன் சந்திப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை

திருப்பூர், டிச. 14 - திருப்பூர் மாவட்டத்தில் உயர் மின் கோபுர எதிர்ப்பு கூட்டியக்க விவசாய சங்கத்தின் நிர்வாகி கள், வெள்ளியன்று கர்நாடக மாநிலத்தில் உயர் மின்கோபு ரங்களால் பாதிக்கப்பட்ட விவ சாய சங்கத்தினரை சந்தித்து உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக சேர்ந்து வழக்குத் தொடுப்பது பற்றி ஆலோசனை செய்தனர். இது பற்றி உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகை யில்: உயர் மின் கோபுரங்கள் பிரச்சனைக்காக உச்ச நீதிமன்றத் தில் இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்யவும், மின்காந்த அலைகள் குறித்து பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்கவும் வேண்டி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்குகளில், கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப் பட்ட உழவர்களை இணைப்ப தற்காக வழக்கறிஞர் ஈசன் மற் றும்  பத்திரிகையாளரும், உழவர் இயக்கங்களின் சர்வதேச ஒருங்கி ணைப்பாளருமான தூரன் நம்பி (எ) நல்லாக் கவுண்டர் இருவ ரும் வெள்ளியன்று பெங்களூரு சென்றனர். இங்கு கர்நாடக ராஜ்ய ரையத் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகரை அவரது சங்க அலுவ லகத்தில் சந்தித்துப் பேசினர். முன்னதாக, உயர்மின் கோபுரங்க ளில் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநில போராட்டக் குழுவை சந்திரசேகர் அங்கு வரவைத்து இருந்தார். அங்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது சம்பந்தமாக அவர்களுடன் ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக இராஜ்ய ரயத் சங்கத்தின் நிர்வாகி களும், பாதிக்கப்பட்ட உழவர்களு மான விர்பாச்சா, சோமசேகர ரெட்டி மற்றும் பல பாதிக்கப்பட்ட உழவர்கள் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்றத்தில் தொடுக்க உள்ள வழக்குகளுக்காக மனுதா ரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு தொடர்ச்சியான இந்த போராட்டப் பயணத்தில் இணைந்து பயணிப்பதாக கர் நாடகாவில் பாதிக்கப்பட்ட விவ சாயிகளும் உறுதி ஏற்றனர்.  அடுத்த வாரத்தில் தெலுங் கானா மற்றும் ஆந்திர மாநிலங்க ளுக்கு செல்லவும் திட்டமிட்டி ருப்பதாக கூட்டியக்கத்தின் ஒருங் கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.