tamilnadu

img

போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சார்பில் முதல்வருக்குக் கடிதம் அனுப்பும் போராட்டம்

திருப்பூர், ஆக. 16- திருப்பூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவ ரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடி யாக அமலாக்க வேண்டும். 2

007 ஆம் ஆண்டு முதலான ஒப்பந்த உயர்வுகள் அடிப்படையில் ஓய்வூ தியம் மாற்றி அமைக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு முதல் குடும்ப ஓய் வூதியர்களின் பென்சன் உள்ளிட்ட நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனியன்று திருப் பூர் சிடிசி கார்னர் பகுதியில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவல கம் முன்பிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட் டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஈடுபட்டனர்.

கோவை

இதேபோல், கோவை மாவட் டம் சுங்கம் பகுதி மற்றும் பொள் ளாச்சியில் நடைபெற்ற அஞ்சல் அட்டை கையெழுத்து இயக்கப் போராட்டத்தில்  சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.