அவிநாசி, ஜூலை 11- அவிநாசியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் கொரோனா நோய் தொற் றுத் தடுப்பு நடவடிக்கை யாக விழிப்புணர்வு முகாம் சனியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகா மில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலை யில் இம்முகாமில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது.
இதைய டுத்து அனைவருக்கும் கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் உள் ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப் பட்டன. இதில், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், மருத்துவர்கள் மோகன்ராஜ், ஜெயந்தி, யாகசுந்தரம், மருத்துவ சுகாதார ஆய்வாளர் ரமேஷ், வட்டாட்சியர் சாந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் குணசேக ரன், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி ஆகி யோர் பங்கேற்றனர்.