திருப்பூர், நவ. 29- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்த திருப்பூர் மாவட்ட அளவிலான விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர் அப்பாச்சி நகர், ஏற்று மதியாளர் சங்க கூட்டரங்கில், திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட தொழில் மையம் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக் கான திட்டங்கள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட் டம் மாவட்ட ஆட்சியர்க.விஜய கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்களுக்கு அரசு மூலம் வழங்கப் படும் மானியம் குறித்தும் மற்றும் இதர உதவிகள், வங்கிக் கடனுத விகள் பெறும் வழிமுறை குறித் தும், தமிழ்நாடு தொழில் முதலீட் டுக் கழகத்தின் மூலமாக தொழில் தொடங்க வழங்கப்படும் கடனுதவி கள் பற்றியும் புதிய தொழில் முனை வோருக்கு விழிப்புணர்வு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தொழில் துறை வல்லு நர்கள், தொழில் வளர்ச்சிக்கு தொடர்புடைய மத்திய, மாநில அரசு அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு திருப் பூர் மாவட்டத்தில் தொடங்க வாய்ப் புள்ள தொழில்கள் பற்றியும் அரசு வழங்கும் மானிய மற்றும் இதர உத விகள் குறித்தும், வங்கிகளின் கட னுதவித் திட்டங்கள் குறித்தும் முகாமில் விளக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீட்ஸ் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு ரூ.4.16 கோடி திட்ட முதலீட்டுக் கான வங்கிக் கடனுதவிகளையும், நீட்ஸ் மற்றும் பி.எம்.இ.ஜி.பி. திட் டத்தின் கீழ் பயிற்சி முடித்தவர் களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர்க.விஜயகார்த் திகேயன் வழங்கினார். இந்நிகழ் வின் போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலை வர் ராஜா சண்முகம், பொருளாளர் மோகன், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் சத்யமூர்த்தி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கிளை மேலாளர் இராஜேந்திரன், நிப்டீ கல்லூரி தலைவர் முருகானந்தம், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.