tamilnadu

தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு

திருப்பூர், ஜூன் 15 - இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்  கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச் சார் நிறுவனம், விபா நிறுவனம்,  என்சிஇஆர்டி இணைந்து தேசிய  அளவிலான அறிவியல் விழிப்பு ணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வு இந்தியா முழுவதும் நவம்பர் 24 (ஞாயிறு) மற்றும் நவம்பர் 30 (சனி) ஆகிய இரு நாட்கள்  இணைய வழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் இத் தேர்வு நடைபெறும். இத்தேர் வினை ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி,  மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய  பிராந்திய மொழிகளிலும் மாண வர்கள் தேர்வு எழுதலாம். முக்கிய மாக தமிழ் வழியில் தேர்வு எழுதும்  மாணாக்கர்களுக்கு தேசிய அள விலான தேர்வு வரை அனைத்து தேர்வும் தமிழிலேயே நடைபெறும். இத்தேர்வில் பங்கேற்பதற்கான தேர்வுக் கட்டணம் ரூ.100, செப் டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். 6ஆம் வகுப்பு முதல்  11ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இத் தேர்வில் பங்கேற்கலாம். இதில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 11ஆம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும். www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் இருந்தால் பள்ளியே தேர்வு மையம்  அமைக்கப்படும். தனித்தேர்வர் களுக்கு மாநிலம் முழுவதும் சுமார்  10 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவர்கள் விண்ணப்பிக் கும்போது தேர்வு மையத்தை தேர்வு  செய்து கொள்ளலாம். தனித்தேர் வர்கள் ஜூலை 15, 2019 முதல்  இணையதளம் மூலம் விண்ணப்பிக் கலாம். பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக் கர்களுக்கு பள்ளி அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவில் (6 முதல் 11 ஆம்  வகுப்பு வரை) ஒவ்வொரு வகுப் பிற்கும் 3 பேர் வீதம் 18  பேர் தேர்ந் தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு  அழைத்துச் செல்லப்படுவர். மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில்  அமைந்து இருக்கும். இதில் தேர்வு  செய்யப்படும் 120 மாணாக்கர் களுக்கும் சான்றிதழ்கள், கேட யங்கள் வழங்கப்படும். 120 மாணாக் கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு  ரொக்கப் பரி சாக முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ,2,000 வழங்கப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் (6 முதல்  11 ஆம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அள விலான முகாமிற்கு அழைக்கப்படு வார்கள். தேசிய அளவில் கலந்து கொள் பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் (6 முதல் 11 ஆம் வகுப்பு வரை) 3 பேர்  வீதம் தேர்வு செய்யப்பட்டு சான் றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம்  பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங் கப்படும். அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது  ஆராய்ச்சியாளருடன் இணைக்கப் பட்டு அவர்கள் படிக்க, கருத்து களை தெரிந்து கொள்ள வழிகாட் டப்படுவார்கள். இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்ட றியப்பட்டு அவர்கள் ஊக்குவிக் கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப் பாக அமையும். இதுகுறித்து அறிந்து  கொள்ள அலைபேசி :99424 67764, 87782 01926 மூலமாகவும் தெரிந்து  கொள்ளலாம்  என வித்யார்த்தி விஞ்  ஞான் மந்தன் மாநில  ஒருங்கிணைப் பாளர் கண்ணபிரான்  தெரிவித்துள் ளார்.