திருப்பூர், ஜன. 21 - திருப்பூர் மாவட்டத்தில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இப்பேரணியானது திருப்பூர் அவிநாசி சாலை, குமார் நகர் பழைய வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலக வளாகத் தில் இருந்து தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் பேரணியைத் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் சாலை பாது காப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை மாணவ, மாணவி கள் ஏந்திக் கொண்டு முழக்கமிட்டுச் சென் றனர். குமார் நகர், பங்களா ஸ்டாப், புஷ்பா ரவுண்டான உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளின் வழியாக தேவாங்கபுரம் மாந கராட்சி பள்ளியில் இப்பேரணி நிறைவ டைந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குமார் (திருப்பூர் வடக்கு), முருகானந்தன் (திருப்பூர் தெற்கு) உள்பட போக்குவரத்து, காவல் துறை அலுவலர் கள் கலந்துகொண்டனர். பல்லடத்தில் நடைபெற்ற சாலை பாது காப்பு வாரவிழாவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருப்பூர் மாவட்ட காவல்துறை, திருப்பூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்லடம் ராஜேஸ்வரி நர்சிங் ஹோமுடன் இணைந்து வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரி சோதனை முகாம் நடத்தப்பட்டது. மேலும் காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், வாகன ஓட்டுநர்களுக்கு இலவச தலைக் கவசம் வழங்கி அதை அணிவித்தார். இவ்விழாவின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய பிரச்சார வாகனத்தையும் திஷா மிட்டல் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் பல்லடம் உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல், பல்லடம் காவல் நிலைய ஆய் வாளர் ரமேஷ்கண்ணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளின் முக்கியத் துவம் குறித்து உரையாற்றினர். இந்நிகழ்ச்சி யில் ஏராளமான வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர். அவிநாசியில் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் தலைக்கவசம் உள் ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோ கிக்கப்பட்டது.