உடுமலை, அக்.13- சங்கம் வைத்த தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்கில் செயல்படும் ஜெயின் இரிகேசன் நிர்வாகத்தைக் கண்டித்து சிஐ டியு-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூகா ஏலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகே சன் சிஸ்டம்ஸ் லிட் என்ற விவசாய பொருள் கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல் பட்டு வருகிறது.
இங்கு நூற்றுக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வரு கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊர டங்கை காரணம் காட்டி தொழிலாளர்க ளுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வேலை வழங்காமலும், அக்டோபர் வரை சம்பளம் வழங்காமலும் நிர்வாகம் இழுத்த டித்து வருகிறது. குறிப்பாக, தொழிற்சங் கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு சம்ப ளம் மறுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இன்றுவரை நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண் டித்தும், உடனடியாக வேலையும், சம்பள மும் வழங்கக்கோரி எலையமுத்தூரில் உள்ள தொழிற்சாலையின் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
சிஐடியு ஜெயின் இரிகேசன் கிளை செயலாளர் சுரேஸ் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.