tamilnadu

img

உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறுக

தாராபுரம், அக்.9- உயர் அழுத்த மின் கோபுரங் களுக்கு எதிராக போராடிய கூட்டி யக்க தலைவர்கள் மீது போடப் பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி அக்.14 ல் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒட்டு மொத்த முறையீடு செய்ய உள்ள தாக புதனன்று நடைபெற்ற  விவசாயிகள் ஆலோசனைக் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள் ளது. உயர் அழுத்த மின் கோபுரங் களுக்கு எதிரான விவசாய சங்கங் களின் கூட்டியக்க தலைவர்க ளான வழக்கறிஞர் மு.ஈசன், ஆர்.சண்முகசுந்தரம், எஸ்.முத்து விஸ்வநாதன், க.ர.பார்த்தசாரதி, ஆர்.தங்கமுத்து ஆகியோரை கடந்த செப்.மாதம் 13 ஆம் தேதியன்று காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இவர்கள் புதனன்று தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட நிலையில், இரண்டாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.  முன்னதாக, கூட்டியக்க தலை வர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவதையொட்டி, பல்வேறு விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் நீதிமன்றத்தின் முன் திரண்டி ருந்தனர். ஆனால், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டதையடுத்து தாராபுரம் பார்க் ரோடு வர்த்தக கழக திருமண மண்டபத்தில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசி யம் குறித்து விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கருத்துகளை தெரிவித்தனர்.  இதில் கூட்டியக்க தலைவர்கள் மீதான பொய்வழக்கை திரும்ப பெறக் கோரி வருகிற 14 ஆம்  தேதியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திரளான விவசாயி கள் ஒன்று திரண்டு ஒட்டுமொத்த முறையீட்டை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர்கள் எஸ்.ஆர்.மதுசூதனன், ஏ.எம்.முனுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வெ.பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) நிர்வாகிகள் துளசிமணி, பொன்னுச்சாமி, தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்க நிர்வாகி  கவின், முத்துசாமி, தமிழ் ராஜேந் திரன், உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகி சோமசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள், சேலம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி, திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தாராபுரம் தாலுகா செயலாளர் ஆர்.வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபு ரம் தாலுகா செயலாளர் என்.கன கராஜ் மற்றும் விவசாயிகள், பெண்கள் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.