அவிநாசி, மார்ச் 10- அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அவிநாசி பழைய பேருந்து நிலையப் பகுதியில் பெரிய சாக்கடை கால்வாய் உள்ளது. இதனை மூடியிருந்த கல் உடைந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக விரிசல் அடைய தொடங்கியது. இதனால் விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் சாக்கடை கால்வாய்க்கு மேலே பாலம் கட்டும் பணியினை தொடங்கினர். இதன் காரணமாக பேருந்துகள் காவல் நிலையத்திற்கு அருகில் நின்று செல்கிறது. இதனால் பயணிகள் சாலையில் நின்று பேருந்தில் ஏறிச் செலலும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக, பேருந்து நின்று செல்லும் வகையில் அப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியுள்ளனர்.