tamilnadu

இஎஸ்ஐ வேலையில்லா கால நிவாரணம் நிபந்தனைகள் தளர்வு ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

திருப்பூர், ஆக. 22 – இஎஸ்ஐ நிறுவனத்தின் வேலையில்லா கால நிவாரணத் திட்டத்தில் முந்தைய நிபந் தனைகளைத் தளர்த்தி, 90 நாட்கள் வேலை யில்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு சராசரி ஊதியத்தில் 50 சதவிகிதம் வழங்கு வது என முடிவு செய்யப்பட்டதை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்றுள்ளது. தில்லியில் இஎஸ்ஐ கார்ப்பரேஷனின் 182 ஆவது கூட்டம் வியாழனன்று அமைச் சர் சந்தோஷ்குமார் கெங்வார் தலைமை யில் நடைபெற்றது. இதில் கொரோனா கால மீட்பு நடவடிக்கையாக, இஎஸ்ஐ வேலை யில்லா கால நிவாரணத் திட்டத்தில் நிபந்த னைகளைத் தளர்த்தியுள்ளனர்.

ஏற்கெ னவே உள்ள நிபந்தனைப்படி, இஎஸ்ஐயில் பதிவு செய்து இரண்டாண்டுகள் பங்க ளிப்புப் பணம் செலுத்திய தொழிலா ளர்களுக்கு, 90 நாட்கள் வேலையில்லா விட்டால் அவர்களுக்கு சராசரி ஊதி யத்தில் 25 சதவிகிதம் நிவாரணம் வழங்கு வதாக இருந்தது. தற்போது கொரோனா காலத்தில் 90 நாட்கள் வேலையில்லாமல் இருந்தால், அவர்களது சராசரி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை வழங்குவது என்று முடிவு செய்துள்ளனர். முன்பு 90 நாட்களுக்குப் பிறகே அந்த தொகை கிடைக்கும், தற் போது 30 நாட்களில் இத்தொகையைப் பெற லாம் என தளர்த்தப்பட்டுள்ளது.

வேலையில்லா கால நிவாரணம் வழங் கும் திட்டத்தை 2021 ஜூன் 30 வரை மேலும் ஓராண்டு காலத்துக்கும் நீடித்துள்ளனர். எனினும் 30 நாட்களில் இந்தத் தொகை பெறுவது என தளர்த்தப்பட்ட நிபந்தனை கள் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை மட் டுமே பொருந்தும், அதன் பிறகு உள்ள நிலை மைக்கு ஏற்ப இத்திட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இஎஸ்ஐ கார்ப்ப ரேஷன் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

இஎஸ்ஐயின் இத்திட்டத்திற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதுடன், ஏற்றுமதியாளர்கள் பொரு ளாதார நெருக்கடியைச் சந்திக்கும் நிலை யில் இந்த முக்கியமான முடிவு சிரமப்படும் தொழிலாளர்களுக்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

நேரடி பணஉதவியே தேவை...

அதேசமயம் சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறுகையில், இஎஸ்ஐயின் இந்த நடவடிக்கை திருப்பூரைப் பொருத்தவரை பெருமளவு பலனளிக்காது என்றார். ஏனெ னில் இங்கு மொத்தத் தொழிலாளர்களில் இஎஸ்ஐயில் சேர்க்கப்பட்ட தொழிலா ளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதிலும் இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக பணம் செலுத்தியோருக் குத்தான் இந்த நிவாரணம் என்ற நிபந்தனை காரணமாக இஎஸ்ஐ உறுப்பினர்களாக இருக்கக்கூடிய தொழிலாளர்களிலும் கணி சமானவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை. குறிப்பாக கொரோனா பொது முடக்கம் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வருமானம் இழந்துள்ளனர். 

தொழிலாளர் குடும்பத்துக்கு மத்திய அரசு நேரடியாக மாதம் ரூ.7500 வீதம் ரொக் கமாக வழங்க வேண்டும் என்பதே சிஐடியு வின் கோரிக்கை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நேரடியாக நிவாரணம் வழங்க மறுக்கின்றன. மாறாக, தொழிலாளர் பங்க ளிப்புத் தொகையையே அவர்களுக்கு நிவா ரணம் என வழங்குவது ஏற்புடையதல்ல. தொழிலாளர்களின் மருத்துவம், பாதுகாப்புக்குக் காப்பீடு செய்யப்பட்ட இஎஸ்ஐ நிதியைத் தற்காலிக நிவாரணமாக வழங்குவது நீண்ட கால அடிப்படையில் சரியான நடவடிக்கை அல்ல, இது இஎஸ்ஐ காப்பீட்டின் நோக்கத்தையே சிதைக்கக் கூடியதாகும் என்பதே சிஐடியுவின் நிலை பாடாகும். எனவே மத்திய அரசு தொழிலா ளர்களுக்கு நேரடி பண உதவி செய்ய வேண் டும் என்றும் ஜி.சம்பத் கூறினார்.