தாராபுரம், ஆக. 12 - வடமாநிலங்களில் மழை வெள்ளத்தின் காரணமாக மும்பை மற்றும் பல்லாரியிலிருந்து வெங்காயம் தாரா புரத்திற்கு விற்பனைக்கு வந்தது. வடமாநில மக்கள் சப்பாத்தி சப்ஜிக்கு பல்லாரி வெங் காயத்தை அதிகமாக உபயோகிப்பார்கள். நாசிக், ராஞ்சி மற்றும் பல்லாரியில் உற்பத்தியாகும் வெங்காயம் மும்பை மார்க்கெட்டுக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படும். பிறகு அங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தென்மாநிலங்களில் கர்நாடாகாவிலும், தமிழகத்திலும் உள்ளுர் வரத்து ஓர ளவு இருப்பதால் வடமாநிலத்திலிருந்து வெங்காயம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதில்லை. தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் கன மழை யால் மும்பை மொத்த வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்க இயலாமல் நாட்டின் அனைத்து பகுதிக்கும் வந்த விலைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், மும்பை யிலிருந்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு சுமார் 100 லாரிகளில் பல்லாரி வெங்காயம் விற்பனைக்கு வந்தது. அங்கும் கன மழையால் தாராபுரத்திற்கு வந்தது. இதன் காரணமாக தாராபுரம் உழவர் சந்தை அருகே கடந்த வாரங்களில் சில்லறையில் கிலோ ரு.30க்கு விற்கப்பட்ட வெங்காயம் விலை தற்போது குறைந்துள்ளது.