tamilnadu

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

அவிநாசி, ஜூன் 10- அவிநாசி அருகே நஞ்சைதாமரைக் குளத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வேண்டி  செவ்வாயன்று சாலைமறிய லில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வடுகபாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சை தாமரைக்குளத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இந்நிலை யில், இப்பகுதி பொதுமக்களுக்கு 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனைத் தொடர்ந்து  அப்பகுதிப்  பொதுமக்கள் தற்காலிகமாக தாகத்தைப்போக்க  விவசா யிகள் தோட்டத்திற்கு சென்று குடிநீர் எடுத்துச் வருகின்ற னர். இதனால் வேலைக்குச் செல்ல முடியாத  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஊராட்சி  நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டு குடி நீர் கிடைக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த நஞ்சை  தாமரைக் குளத்தை சேர்ந்த பொதுமக்கள்  காலி குடத்துடன்  சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற னர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு விரைவில் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என உறுதியளித்த பிறகு  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;