திருப்பூர், மே 24- பெருமாநல்லூரில் இருந்து நம்பி யூர் செல்லும் சாலையில் தடுப்பு ஏற் படுத்தி வைத்திருப்பதை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பெருமா நல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் அருகே கோவை சாலை யில் இருந்து தோரண வாயில் வழியாக நம்பியூர் செல்லும் சாலை உள்ளது. பெருமாநல்லூர் அரசு மருத்துவ மனைக்கும் அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கோயில்களுக்கு பக்தர்கள் செல் வதும் தடை செய்யப்பட்டது. எனவே கொண்டத்து காளியம்மன் கோயில் நிர்வாகம், மேற்படி நம்பியூர் சாலையில் அலங்கார வளைவு பகுதி யில் தட்டி, கம்புகளை வைத்து அடைத்துவிட்டது.
இதனால் அரசு மருத்துவ மனைக்குச் செல்வது உள்ளிட்ட இந்த சாலையை பயன்படுத்துவது நிறுத்தப் பட்டது. எனினும் நான்காவது கட்ட ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், இப்பாதையின் தடுப்புகளை கோவில் நிர்வா கம் அகற்றாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல சிரமத்திற்கு உள் ளாகின்றனர். மருத்துவ மனைக்கு செல்வ வதற்கும், ஆம்பு லன்ஸ் செல்வதற்கும் வடக்கு கிராம மக்கள் தங்கள் ஊருக்கு போய் வரவும், மிகவும் அவதிக்குள் ளாகின்றனர். நெடுஞ்சாலை துறையும் இதைக் கண்டும் காணாமல் உள்ளது. எனவே உடனடியாக இந்த அடைப்பை நீக்கி பொது மக்களின் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
கடந்த காலத்தில் இந்த பொதுப் பாதையை மறித்து கதவு போட கோயில் நிர்வாகம் முயற்சித்ததா கவும், இப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பின்பு இம் முயற்சி கைவிடப்பட்டது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இப்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்த பாதையை நிரந்தர மாக அடைக்கும் முயற்சி மேற் கொள்ளக் கூடும். எனவே மாவட்ட நிர் வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் உடனே நடவடிக்கை எடுத்து இந்த சாலையைத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.