tamilnadu

உற்பத்தியாளர் சங்கங்கள் காலதாமதம் செய்யாமல் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு முன்வருக பனியன் தொழிலாளர் சங்கம் வேண்டுகோள்

திருப்பூர், அக்.14 – புதிய ஊதிய உயர்வு தொடர் பாக உற்பத்தியாளர் சங்கங்கள்  காலதாமதம் செய்யாமல்  ஆக்கப்பூர் வமான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென  பனியன் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. திருப்பூர் பின்னலாடை துறையை பொறுத்தவரை ஆண் டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. நேரடியாக மற்றும் மறைமுகமாக 9 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் பின்னலாடை தொழி லாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந் தமானது தொழிற்சங்கத்தினர் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை மூலமாக இறுதி செய்யப்பட்டு முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது.

எனினும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தொழில் அமைப்புகள் திட்டமிட்டு காலதா மதம் செய்து ஒப்பந்த காலத்தை நீடித்து வருகின்றன.  கடந்த முறை ஊதிய ஊயர்வு ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல்  1ஆம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதில் 33 சதவீத  ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட் டது. முதலாமாண்டில் 18 சதவீத  உயர்வும், அடுத்த 3 ஆண்டுக ளுக்கு தலா 5 சதவீத உயர்வு வீதம்  அளிப்பதாகவும் முடிவு செய்யப் பட்டது. 2016ஆம் ஆண்டு போடப் பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவ தியானது. முறைப்படி 2020 ஏப்ரல்  முதல் தேதியிலிருந்து புதிய ஊதிய  உயர்வு ஒப்பந்தம் அமலுக்கு வந்தி ருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பால் தொழில்  முடக்கம் காரணமாக உற்பத்தி யாளர்கள் மற்றும் தொழிற்சங் கத்தினர் சார்பில் பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது திருப்பூர் பின்னலா டைத் துறை செயல்படத் தொடங்கி யுள்ள நிலையில், ஊதிய உயர்வு  பேச்சு வார்த்தையை தொடங்க  வேண்டும் என தொழிற்சங்கங்க ளின் கூட்டுக்குழு சார்பில் உற்பத்தி யாளர்கள் சங்கங்களுக்கு ஏற்கெ னவே கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் உரிய பதில் கிடைக்காத காரணத்தால், ஊதிய உயர்வு  உட்பட 16 அம்சக் கோரிக்கைகளை  வலியுறுத்தி வரும் அக்.20ஆம் தேதி  அனைத்து பனியன் தொழிற்சங்கத் தினர் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.  இந்த சூழலில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்  (சைமா) சார்பில் தொழிற்சங்கங் களுடன் புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை செவ்வா யன்று நடைபெற்றது.  இதில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொழில் நிறுவனங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

எனவே தீபா வளி பண்டிகைக்கு பிறகு பேச்சு வார்த்தையைத் தொடங்க சைமா சார்பில் தெரிவிக்கப்பட்டதாக சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன்  கூறினார். ஆனால் தொழிலா ளர்கள் வேலை இழப்பு, வருமான இழப்பைச் சந்தித்து வரும் நிலை யில், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், தாமதமின்றி பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.  இதையடுத்து பிற உற்பத்தியாளர் அமைப்புகளுடன் கலந்து பேசி தகவல் தருவதாக சைமா கூறியுள்ளது.  அதேநேரம், முறையாக பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு ஆக்கப் பூர்வமாக நடைபெற்றால் ஏற்றுமதி யாளர் சங்க அலுவலகம் முன்பாக நடத்த திட்டமிட்டிருக்கும் போராட் டத்தை நடத்துவது குறித்து மறுப ரிசீலனை செய்வோம். உற்பத்தியா ளர் சங்கங்கள் கால தாமதம் செய்யும்  நோக்கத்தைக் கைவிட்டு ஆக்கப்பூர் வமான பேச்சுவார்த்தைக்கு முன்வர  வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கூறினர்.