திருப்பூர், அக். 20 – திருப்பூர் சிறுபூலவபட்டி சாலை ஜவ ஹர் நகர் குடியிருப்பில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுச் சாலையை ஆக்கி ரமித்து, தனியார் தொழிற்சாலை நிர்வா கம் கழிவுநீர் தொட்டி கட்டி வருவதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். திருப்பூர் ஜவஹர் நகர் குடியிருப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான 15 அடி அகல சாலை, குடியிருப்பின் தென்புறமாகச் செல்கிறது. இங்குள்ள பிரிண்டிங் நிறுவ னத்தினர் இந்த சாலையில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட னர். இதை இக்குடியிருப்பு மக்கள் எதிர்த்த னர். இதையடுத்து, அப்போது ஆக்கிரமிப்பு முயற்சி தடுக்கப்பட்டு, மாநகராட்சி குடிநீர் திட்ட விநியோகக் குழாய் இந்த பாதையில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில், குழாய் செல்லும் பகுதி யிலே சாலையின் நடுப் பகுதியில் பெரிய தாக பள்ளம் தோண்டி, கழிவுநீர் தொட்டி அமைக்கும் வேலையை மேற்படி தனியார் நிறுவனத்தினர் பகிரங்கமாக மேற்கொண் டுள்ளனர். இதற்கு இந்த குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த னர். மாநகராட்சி குடிநீர் குழாய் அருகி லேயே பொதுப்பாதையை ஆக்கிரமித்து கழிவுநீர்த் தொட்டியை அமைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் மேற்படி பிரிண்டிங் நிறுவனத்தி னர் அடாவடித்தனமாக பணியை மேற் கொள்வதுடன், பொது மக்களுக்கும் மிரட் டல் விடுத்துள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவஹர் நகர் பொது மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.