tamilnadu

img

போன் பே வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

போன் பே மூலம் அனுப்பிய தொகை உரிய கணக்கில் சேரவில்லை என்பதால் போன் பே மற்றும் வங்கிக்கு 7 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசித்து வருபவர் செந்தில்குமார் (35). இவருடைய வங்கிக் கணக்கு திருப்பூர் ஸ்டேட் வங்கியில் இருக்கிறது. கடந்த 2017 ஜனவரி 3 ஆம் தேதி இவர் “போன் பே” செயலி மூலம் திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டது.  

முதலில் 5,000 ரூபாய் அனுப்பிய பணம் அவர் கணக்கில் சேர்ந்தது. பின் ரூ.9,500 அனுப்பியபோது, பணம் வங்கிக் கணக்கில் சேரவில்லை. அடுத்தநாள் திரும்பவும் அனுப்பிய ரூ.9,500 சேர்ந்துவிட்டது.  

இதனால் முதல் நாள் அனுப்பிய தொகை விவரங்கள் குறித்து, பெங்களூருவிலுள்ள போன் பே நிறுவனம் மற்றும் ஸ்டேட் வங்கிக்கு புகார் அனுப்பப்பட்டது. பலமுறை தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 2019 ஜூலை 26 ஆம் தேதி திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர், கணக்கில் மாற்றிய அடிப்படையில் வரவேண்டிய தொகை ரூபாய் 9,500 உடன், அவருக்கு மன உளைச்சலுக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்கு 5,000 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாயை வழக்கு தொடுத்த நாள் முதல், 12 சதவீதம் வட்டியுடன் சேர்த்து “போன் பே” மற்றும் ஸ்டேட் வங்கி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

;