அவிநாசி, அக். 22- அவிநாசி தாமரைக் குளத்திற்குள் குப்பைகளைக் கொட்டிய வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வா கத்தினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், கொட்டப்பட்ட குப்பைகள் திரும்ப அள்ளிச் சென்ற னர். அவிநாசியின் பிரதான நீராதாரக் குளமாக அவி நாசிலிங்கேஸ்வரர் கோயிலின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாமரைக்குளமும், சங்கமாங்குளமும் உள்ளது. இதனை அவிநாசி பகுதியைச் சேர்ந்த பல்வேறு சமூக அமைப்பினர் தூர்வாறுதல், மரக்கன்று நடுதல் உள் ளிட்ட பணிகளைச் செய்து நீர்வழிப் பாதைகளைப் பாராமரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அவி நாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட் சிப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை புத னன்று மாலை ஊராட்சி நிர்வாகத்தினர் தாமரைக் குளம் பகுதியில் கொட்டினர். இதையறிந்த அப்பகுதி மக்கள், விவசாயிகள் குப்பை கொட்டிய லாரியை மறித்து, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து வேலாயு தம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் தாமரைக் குளத்திற்குள் கொட்டிய குப்பைகளைத் திரும்ப லாரி யில் அள்ளிச் சென்றனர்.