திருப்பூர் மாவட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 29.44 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை இன்று திறந்து வைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 4 மேல்நிலை தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்துள்ளார். உகாயனுர் ஊராட்சி வடுக பாளையத்தில் 7.36 லட்சம் மதிப்பீட்டிலும், பெருந்தொழுவு ஊராட்சி கரியம் பாளையம் 7.36 லட்சம் மதிப்பீட்டிலும்,
பெருந்தொழுவு ஊராட்சி மணியம் பாளையம் 7.36 ,லட்சம் மதிப்பீட்டிலும், உகாயனுர் ஊராட்சி வாக்குட்ட பாளையத்தில் 7.36 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட தொட்டிகளின் மொத்த மதிப்பீடு 29.44 லட்சமாகும்.