tamilnadu

img

சீரான குடிநீர் விநியோகம் செய்திடுக ஓனாக்கல்லூர் கிராம மக்கள் சாலை மறியல்

உடுமலை, அக்.21- உடுமலை அருகே ஓனாக்கல்லூர் கிராமத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் அக்கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு நிலவியது. திருப்பூர் மாவட்டம், உடுமலை ஜல்லிபட்டி ஊராட்சிக் குட்பட்டு ஜல்லிபட்டி, ஒனாக்கல்லூர், சந்தனகருப்பனூர், தினைக்குளம், வெங்கிட்டாபுரம் உள்ளிட்ட  ஒன்பது கிரா மங்கள் உள்ளன. இங்கு சுமார் இருபதாயிரத்திற்கும் மேற் பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக ளுக்கு ஜல்லிபட்டி ஊராட்சி மூலம் திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், ஓனாக்கல்லூர் கிராமத்திற்கு மட்டும் கடந்த ஆறு மாதகாலமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால், அக்கிராம மக்கள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள நால்ரோடு பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் அவலநிலைக்கு உள்ளாகினர்.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரி வித்தும் தற்போது வரை கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆவேசமடைந்த ஓனாக்கல்லூர் கிராமமக்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நடந்துவந்து ஜல்லி பட்டி நால்ரோடு பகுதியில் சாலை மறியல் செய்ய முயன்ற னர். இத்தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தளி காவல் துறையினர் மற்றும் ஊராட்சி பிரிதிநிதிகள், பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்த பலனும் எட்டப் படாத நிலையில், ஒன்றிய ஆணையாளர் வந்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.