திருப்பூர், நவ. 4- தில்லியில் வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண் டித்து திருப்பூரில் அனைத்து வழக்கறிஞர்கள் கோபாவேச கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் திங்களன்று நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். இதன் தொடர்ச்சியாக சார்பு நீதிமன்ற வளாகத்தின் முன் பாக திருப்பூர் மாநகர அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மூத்த வழக்கறிஞர் ஆர்.ராமசாமி தலைமை தாங்கி னார். வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரி வித்தும், காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்ராம், மூத்த வழக்கறி ஞர்கள் ஆ.விவேகாநந்தன், சண்முகவடிவு ஆகியோர் உரை யாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வை.ஆனந்தன், அமர்நாத் உள்பட வழக்கறி ஞர் திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மத்தியக்குழு உறுப்பினர் அ.மணவாளன் பேசினார்.