அவிநாசி, ஆக. 4 - அவிநாசி அடுத்த சேவூரில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள் ளது. அவிநாசி ஒன்றியம் சேவூரில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் இந்தியன் ஆயில் நிறுவனத் தின் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் பங்க் நிறுவனம் கழிப்பி டத்திற்குப் பதிக்கும் குழாயினை சாலை ஓரம் ஆக்கிர மிப்பு செய்து வரிசையாக அடுக்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்ப டுத்தி வருகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப் புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அப்புறப்படுத்த வேண்டும் எனவாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிக ளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக ளிடம் கேட்டபோது உடனடியாக ஆய்வு மேற் கொண்டு அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தெரிவித்தனர்.