tamilnadu

திருப்பூர் வழியாக புதிய ரயில்கள் இயக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், ஜூலை 13 - திருப்பூர் வழியாக புதிய ரயில்கள் இயக்குவதுடன், ரயில் சேவைகளை விரிவுபடுத்த நடவ டிக்கை எடுக்கக் கோரி கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு  அளித்துள்ளது. கோவை எம்.பி., பி.ஆர்.நட ராஜன், திருப்பூர் எம்.பி. கே.சுப்ப ராயன், ஈரோடு எம்.பி., அ.கணேச மூர்த்தி மற்றும் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் ஆகி யோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டக்குழு சார்பில் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாவட்டத்தின் மக்கள்தொகை பெருக்கம், மாநக ரத்தின் விரிவாக்கம் நாள்தோறும் கூடிக் கொண்டிருக்கிறது. தமிழ கத்தின் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள், வட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் தொடர்ந்து வேலை தேடி வந்தவண்ணம் உள்ளனர். இந்த  சூழலில் இங்கு ரயில் சேவையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போதைய சூழலில் அதிக போக்குவரத்து நெருக்கடி மிக்க வழித்தடமாக, பராமரிப்புக்குச் சிரம மாக திருப்பூர் மற்றும் கோவை ரயில்  நிலையங்கள் மாறியுள்ள நிலையில்  போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களில் இருந்து கூடு தலான முயற்சிகளை மேற்கொண் டால் ரயில் சேவையை அதிகரிக்க வாய்ப்புகள் கூடுதலாக உள்ளது. எனவே வடகோவை, கோவையில் இருந்து திருப்பூர் வழியாக ஈரோடு வரை காலை மற்றும் மதிய நேரங்களில் பயணி கள் மின்சார ரயில் இயக்க வேண்டும். போத்தனூர் - கோவை யில் இருந்து ராமேஸ்வரம் வரை வாரத்திற்கு ஒரு முறை செல்லும் ரயிலை வாரத்திற்கு மூன்று நாட் களாக அதிகரிக்க வேண்டும், போத்தனூர் - கோவையில் இருந்து  திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக் கல், மதுரை வழியாக திருச்செந்தூர் வரை இயக்க வேண்டும். போத்தனூர் - கோவையில் இருந்து திருப்பூர் வழியாக வட கிழக்கு மாநிலங்களுக்கு வாராந்திர  ரயில் சேவை தற்போது ஒன்று மட்டுமே உள்ளது. இதை அதிகப் படுத்த வேண்டும். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டு நீலகிரி, சேரன் அதிவிரைவு ரயில்களில் தட்கல் முறையில் வழங்கப்படும் பயணச்சீட்டு அளவை குறைத்து முன்பதிவு முறைக்கு அதிக எண் ணிக்கையில் பயணச்சீட்டு அளவை  அதிகப்படுத்த வேண்டும். திருப்பூர் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலம், திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் ஊத்துக் குளி சாலை ரயில்வே மேம்பால பணி களை விரைந்து முடித்து மக்கள்  பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அதிக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கோவை, திருப்பூர், ஈரோடு ரயில் நிலையங் களில் ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கையை அவசர அவசியம் கருதி கூடுதல்படுத்துவது பயணி களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.  திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் ஊர் ஒரு தாலுகா தலைநகர மாக உள்ள நிலையில் பாலக்காடு -  சென்னை ரயில் மடத்துக்குளம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஏற்காடு விரைவு வண்டியை மாலையில் திருப்பூர் வரை இரண்டாம் வகுப்பு பயணம் செய்யும் ரயிலாக விரிவுபடுத்த வேண்டும்.  திருப்பூர் ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் உள்ள பயணிகள் காத்திருப்போர் அறையை முழுப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், முக்கியப் பிரமுகர்கள் காத்திருப்போர் அறை ஒன்றை உருவாக்க வேண்டும். இரண்டு நடைமேடைகளிலும் பயணிகள் நிழற்குடை மற்றும் ரயில் பெட்டி நிற்குமிடம் அறியும் தகவல்  பலகைகளை அமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு செ. முத்துக்கண்ணன் கேட்டுக் கொண் டுள்ளார்.