tamilnadu

img

மாதக்கணக்கில் எரியும் வீதி விளக்குகள் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர், பிப். 2 - திருப்பூர் மாநகராட்சி 33ஆவது வார்டு பாரப்பாளையம் மண்ணரை  பகுதியில் பல இடங்களில் வீதி விளக்குகள் மாதக்கணக்கில் இரவு, பகலாக எரிந்து கொண்டிருக்கின் றன. ஆனால் “மின்சார சிக்கனம், தேவை இக்கனம்!” என பொது மக்க ளுக்கு பரப்புரை செய்யும் மாநக ராட்சி நிர்வாகம் இதைக் கண்டு கொள்ளாமல் மின்விரயம் செய்து வருகிறது. திருப்பூர்- ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையம், சத்யா காலனி முதல் கேடி தோட்டம் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் வீதி விளக்குகள் இரவு பகலாக ஒரு மாதத் துக்கு மேலாக எரிந்து கொண்டிருக் கிறது. அதேபோல் மண்ணரை பகுதி யிலும், கவுண்டநாயக்கன்பாளை யம் பகுதியிலும் மின்விளக்குகள் பட்டப்பகலில் தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருந்தன. இங்கும் மாதக் கணக்கில் இந்நிலை தொடர் வதாக பொது மக்கள் கூறினர். எல்ஈடி விளக்குகள் பொருத்தப் பட்டிருப்பதால் குறைந்த அளவு மின் சாரம் நுகரப்பட்டாலும் கூட இரவு பகலாக மாதக்கணக்கில் எரிவதால் சிறு துளி, பெரு வெள்ளமாக விரயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எல் ஈடி விளக்குகள் மட்டுமின்றி, அதிக மின்சாரம் செலவாகக்கூடிய சோடி யம் ஆவி விளக்கும் இதேபோல் எரிந்து கொண்டிருக்கிறது. இது குறித்து, மாநகராட்சிக்குப் புகார் செய்யலாமே என்று அப்ப குதி மக்களிடம் கேட்டபோது அவர் கள் விசித்திரமான பதிலைக் கூறி னர். ஏற்கெனவே இந்த பகுதிகளில் உள்ள மின் விளக்குகள் பல நாட்க ளாக எரியாமல் இருந்தது. அவ்வப் போது பழுது நீக்கிச் செல்வார்கள். ஆனால் அடுத்து ஓரிரு தினங்களில் மீண்டும் விளக்குகள் பழுதடைந்து விடும். மீண்டும் அழைத்து சொல் வோம். பிறகு நீண்ட நாட்கள் கால தாமதத்துக்குப் பிறகு வந்து சரி செய்து செல்வார்கள்.  இப்படியே அடிக்கடி நடந்து கொண்டிருந்த நிலையில், இப் போது தொடர்ந்து விளக்குகள் முழு நேரமும் எரிந்து கொண்டே இருக் கும்படி இணைப்புக் கொடுத்து விட்டார்கள் போல! இது பற்றி தக வல் சொன்னால் எங்கே மீண்டும் பழையபடி அடிக்கடி மின்பழுது ஏற்படும் நிலை வந்துவிடுமோ என அச்சப்படுவதாக தெரிவித்தனர்.  இது கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், மாநகராட்சி அதிகாரி களின் செயல்பாடு ஏட்டிக்குப் போட்டியாக இருப்பதன் சாட்சி யாக மின்விளக்குகள் இப்போ தும் ஒளிர்ந்து கொண்டிருக்கின் றன. எனவே மாநகராட்சி நிர்வா கம் இனியும் தாமதிக்காமல் இப்பிரச்சனையை முறைப்படுத் திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர்.