திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பூமலூர் அருகே கிடாத்துறை புதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அரங்க சிறப்புப் பயிற்சி முகாம் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இம்முகாமை ஞாயிறன்று நிறைவு செய்து வைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் உரையாற்றினார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால் மற்றும் மாணவர் அரங்கத்தினர் பங்கேற்றனர்.