tamilnadu

பல மணி நேரம் விரயமாகும் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்

திருப்பூர், நவ. 4- திருப்பூர் மாநகராட்சி 25ஆவது வார்டில் 5 லிட்டர் தண்ணீர் தொட்டிக்கு பல மணி நேரம் நீரேற்றம் செய்வதால் மின் விரயமும், தண்ணீர் விரயமும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் இப்பிரச்சனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி நிர் வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகி றது. திருப்பூர் ராம் நகரில் இருந்து செல்லும் ராமையா காலனி பிரதான சாலையில், ஆறு கோம்பை வீதி சந்திப்பு எதிரில் மாநக ராட்சிக்கு சொந்தமான 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டியும், மோட்டார் அறையும் உள்ளது. இங்கு தொட்டியில் தண்ணீர் நிரம்பிய பிறகும் தினமும் இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு மின் மோட்டார் ஓடி பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் விரயமாகி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி யினர் கூறுகையில், இப்பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமிதான் இந்த தொட்டிக்கு நீரேற்றம் செய்வதாகவும், அவர் தனது செல் போனில் தானியங்கி முறையில் மோட் டாரை இயக்கவும், நிறுத்தவும் ஏற்பாடு செய்து வைத்திருப்பதாகவும் கூறினர்.

அவர் நேரடியாக இந்த இடத்துக்கு வராம லேயே வேறு இடத்தில் இருந்தபடியே மோட்டாரை இயக்கி தொட்டிக்கு நீரேற்றம் செய்வதாகவும், இதனால் தொட்டி நிரம்பி யது கூட தெரியாமல் கூடுதலாக இரண்டு மணி நேரம் மோட்டார் ஓடிக் கொண்டி ருக்கிறது, தண்ணீர் விரயமாகி சாக்கடை யில் கலக்கிறது என்று தெரிவித்தனர். இது பற்றி முன்னாள் கவுன்சிலர் வேலுச் சாமியிடம் கேட்டபோது, மாநகராட்சி வாட்டர்மேன் இங்கு பணியில் இல்லை. எனவே எனது செல்போனில் தானியங்கி முறையில் மின்மோட்டார் கட்டுப்பாட்டை வைத்து தண்ணீர் ஏற்றி வருகிறேன். இங்கு என்ன பிரச்சனை என்றால், பொது மக்க ளுக்கு விநியோகம் செய்யும் 5 ஆயிரம் லிட்டர் தொட்டி, மாநகராட்சி மருத்துவம னைக்கு உரிய தண்ணீர் தொட்டி, மாநக ராட்சி பள்ளிக்கூடத்துக்கு உரிய தண்ணீர் தொட்டி என மூன்று தொட்டிகளுக்கும் இந்த  ஒரே இடத்தில் இருந்துதான் நீரேற்றம் செய் யப்படுகிறது.

பொது தண்ணீர் தொட்டி நிரம்பினாலும், மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடத்துக்குரிய தொட்டிகளில் தண் ணீர் நிரம்ப வேண்டியிருப்பதால் தான் தொடர்ந்து மோட்டார் இயக்கப்படுகிறது.  இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மருத்து வமனை, பள்ளிக்கூடத்துக்கு நீரேற்றம் செய் யும் மோட்டார் தனியாக அமைக்க வேண் டும். இதனால் இங்கே கூடுதல் நேரம் மோட் டார் இயக்கப்பட்டு மின்சாரம், தண்ணீர் விர யமாவது தவிர்க்கப்படும். ஆனால் இதைச் செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகத்தி டம் பல ஆண்டுகளாகச் சொல்லியும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே மாந கராட்சி நிர்வாகம்தான் இதற்குப் பொறுப் பேற்க வேண்டும் என்றார்.  எனவே மாநகராட்சி நிர்வாகம் பள்ளி, மருத்துவமனைக்கு தனி ஏற்பாடு செய்து, இங்கு தொடரும் விரயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.