திருப்பூர், அக்.10- திருப்பூரை தலைமையகமாக கொண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது கிளையை துவக்கி ஆடைகளை தயாரித்து விற்பனை செய்துவரும் ராம்ராஜ் நிறுவ னம் தற்போது முகக்கவசங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முகநூல் பக்கத்தில் சீனு என்ப வர் ராம்ராஜ் மாஸ்க் குறைந்த விலையில் கிடைக்கும் என விளம்பரம் பதிவிட்டதை கண்டு அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இந்த கும்பலை பிடிக்க திட்டமிட்டு முகநூலில் பதிவிட்ட சீனு என்ப வரை ராம்ராஜ் நிறுவனத்தார் தொடர்பு கொண்டு அவர் மூலம் போலியாக தரமற்ற முறையில் மாஸ்க் தயாரிக்கும் நேர்மைநா தன் என்பவரை அணுகி உள்ளனர். இதனை யடுத்து 30ஆம் தேதி அவரிடம் முகக்கவ சங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து முன்பணமும் கொடுத்துள்ளனர்.
அதன்படி வியாழனன்று முகக்கவசங்கள் தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கே.வி.ஆர் நகர் பகுதி யில் அமைந்துள்ள அவரது குடோனுக்கு சென்று பார்த்தபோது மாஸ்க்குகள் ராம் ராஜ் முத்திரையுடன் போலியாக தயாரிக் கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திருப்பூர் மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. நேரில் சென்ற போலீசார் போலியாக தயாரிக்கப்பட்ட 1500 முகக்கவ சங்களை பறிமுதல் செய்ததுடன், போலி தயாரிப்பில் ஈடுபட்ட நேர்மைநாதன், ராம்ராஜ் முத்திரையை வடிவமைத்து பிரிண் டிங் செய்த முருகன் மற்றும் முகநூலில் விளம் பரப்படுத்திய சீனு ஆகிய மூவரையும் கைது செய்தனர்.