அவிநாசி மே.3 அவிநாசி அருகே காட்டுவளவு கிராமப் பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கபசுர குடிநீர் வினியோகம் செய்தனர்.
அவினாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவளவு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் கட்சி கிளைச் செயலாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான கே. அய்யம்மாள் தலைமையில் முன்னாள் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்தனர்.