tamilnadu

img

திருப்பூரில் பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு

திருப்பூர், பிப். 5- திருப்பூர் வடக்கு வட்டத்திற் குட்பட்ட வெங்கமேடு மற்றும் கஞ்சம்பாளையம் ஆகிய பகுதி களில் அமைந்துள்ள பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜய கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் புதனன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.  திருப்பூர் மாவட்டத்தில் அமைந் துள்ள நஞ்சராயன் குளத்தின் மறு சீரமைப்பிற்காக தாமோதரன் என் பவரால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தென்மண்டலம், சென்னையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வ ழக்கில் கடந்த டிச.13 அன்று வழங் கப்பட்ட ஆணையில் நஞ்சராயன் குளம் மற்றும் அதன் நீர் வழித்தடமான நல்லாறு ஓடையினை மாவட்ட ஆட்சி யர் தலைமையில் மூத்த விஞ்ஞானி மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய மண் டல அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஆணையாளர், திருப்பூர் மாநகராட்சி, பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் (நீர் சுத்தி கரிப்பு அமைப்பு), தேசிய சுற்றுச் சுழல் பொறியியல் ஆராய்ச்சி நிறு வன விஞ்ஞானி மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி  ஆகியோர் உள்ளடங்கிய குழு வினை அமைத்தது. இக்குழு நஞ்ச ராயன் குளத்தின் தற்போதைய நிலை யினையும், குளம் மாசு அடைவ தற்கான காரணங்களை கண்டறி யவும், குளம் மறுசீரமைப்பு மற்றும் மீண்டும் சீரிய நிலையினை அடைய வும், மாசு ஏற்படுத்துகின்ற தொழில் நிறுவனங்களை கண்டறியவும் மற்றும் சுற்றுச்சுழல் இழப்பீட்டை கணக்கீடு செய்து ஆய்வறிக்கை யினை சமர்ப்பிக்க உத்தரவிட்டி ருந்தது.  இதனை தொடர்ந்து,  நல்லாறு ஓடையின் அருகே இயங்கிக் கொண் டிருக்கும் பொது சுத்திகரிப்பு நிலை யங்களான, பார்க் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கேரி பாளையம் பொது கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம்,  நஞ்சராயன் குளத்தின் அருகே அமைந்துள்ள பொதுப்பணித்துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம், உட்பட ஏனைய தொழிற்சாலை நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும்  ஆய்வின் அறிக்கையினை மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தயார் செய்யப்பட்டு  தேசிய பசுமை தீர்ப்பாயம், தென்மண்டலம்,  சென்னைக்கு  சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.