திருப்பூர், ஜூன் 8 – இன்னும் ஏழு எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருந்தால் நான் என் பதவியை ராஜி னாமா செய்துவிட்டுப் போயிருப்பேன் என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ சு.குணசேகரன் தன் சொந்த கட்சி மீதான அதிருப்தியை நாசூக்காக வெளிப்படுத்தினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க, ஆட்சியர் அலுவல கத்திற்கு எதிரில் உள்ள தெற்குத் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து சு.குண சேகரன் காரில் புறப்பட்டு வந்தார். அந்த சமயத்தில் நீட் தேர்வை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சி யரகம் முன்பாக சாலை மறியலில் ஈடு பட்டனர். அங்கிருந்த காவலர்கள் வாலிபர் சங்கத்தினரை கைது செய்து வாகனங் களில் ஏற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி இருந்தனர். இதில் எம்எல்ஏ குணசேகரன் வாகனத் தையும் காவல் துறையினர் அனுமதிக்க வில்லை. மறியல் முடிந்து வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்ட நிலையில் எம்எல்ஏ குண சேகரன் வாகனத்தை ஆட்சியரகத்திற்கு முன்பாக வந்து நிறுத்திக் கொண்டு மாநகர காவல் உதவி ஆணையர் ஜெ.நவீன் குமாரிடம் வாக்குவாதம் செய்தார். அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடக்கும் நிலையில் அமைச்சர் வந்த பிறகு நான் உள்ளே சென்றால் அது நன்றாக இருக்காது. ஊடகங்களில் அதிருப்தி என்று எழுதுவார்கள். மக்கள் பிரதிநிதியான எனது வாகனத்தைத் தடுத்து நிறுத்தியது ஏன்? எனக்குக் கொடுத்திருக்கும் கார் பாஸிற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பி னார். அதன் பிறகு ஏழு எம்எல்ஏக்கள் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நான் ராஜினாமா செய்துவிட்டுப் போயிருப்பேன் என்று கூறிக் கொண்டே வாகனத்தில் ஏறி ஆட்சி யரகத்துக்குள் புறப்பட்டார். செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பியபோது, உள்ளே வாருங்கள் அங்கு அதைவிட ஏராளமான பிரச்சனைகள் உள்ளன என்றார். அதாவது சமீபத்தில் நடைபெற்ற சட்ட மன்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஏழு எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற தால் அதிமுக ஆட்சி நீடிக்கிறது. திமுக அந்த ஏழு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந் தால் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டி ருக்கும். அதைத்தான் ஏழு எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருந்தால் நான் ராஜினாமா செய்திருப்பேன் என்று மறைமுகமாக, சு. குணசேகரன் குறிப்பிட்டிருக்கிறார். ஆளும் கட்சிக்குள் புகைச்சல் இருப்பதை எம்எல்ஏ குணசேகரன் வெளிப்படுத்தி இருக்கிறார்.