திருப்பூர், பிப். 12 – திருப்பூரில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவரின் நான்கு சக்கர வாகனத்தை விஷமிகள் சிலர் தீ வைத்துக் கொளுத்திய தைக் காரணமாகக் கொண்டு அந்த அமைப் பைச் சேர்ந்தோர் நகரெங்கும் கடைகளை அடைக்கச் சொல்லி அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் திருப்பூர் மாநகர நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, இ.காங்கி ரஸ் நிர்வாகி கோபால்சாமி, மதிமுக மாந கரச் செயலாளர் சு.சிவபாலன், கொ.ம. தே.க. நிர்வாகி தம்பி வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிப். 11ஆம் தேதி இரவு திருப்பூர் மாந கரம் கொங்கு மெயின் ரோடு திருநீலகண் டபுரத்தில் குடியிருக்கும் இந்து முன்னணி யைச் சேர்ந்த எம்.மோகனசுந்தரம் என்ப வரின் நான்கு சக்கர வாகனத்தை சில விஷ மிகள் தீவைத்து எரித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை இது குறித்து விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனங்களில் திருப்பூரின் வீதிக ளில் சென்று திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி வற்புறுத்தி அடாவடித் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மக் களை அச்சுறுத்தும் விதத்தில் அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் மீது கல்வீசித் தாக்கி உடைத்துள்ளனர். ஆனால் காவல் துறை சட்டம் ஒழுங்கைப் பாதுகாக் காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள் ளது. இந்து முன்னணியினரின் இந்த அராஜகச் செயலை மதச்சார்பற்ற முற்போக் குக் கூட்டணி கட்சிகள் சார்பில் வன்மையா கக் கண்டிக்கிறோம். மேலும் திருப்பூரில் இந்து முன்னணி யினர் தொடர்ந்து இதேபோல் வன்முறைச் சம்பவங்களில் வேண்டுமென்றே ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருப்பூர் காவல் துறை இதனைக் கண்டும் காணாமலும் இருந்து வருகிறது. காவல் துறையின் இத்தகைய போக்கையும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கண்டிக்கிறோம். மேற்கண்ட நான்கு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தவர்கள் மீதும், அராஜ கத்தில் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரின் மீதும் காவல் துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளன.