tamilnadu

ரூ.25 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப். 22 -  அவிநாசி அருகே சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத் தில்  ஆயிரத்து 250 மூட் டைகள் வந்திருந்தன. இதில், குவிண்டால் ஒன் றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,280 முதல் ரூ.5,310 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,850 முதல் ரூ.4,980 வரையி லும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.4,240 முதல் ரூ.4,410 வரையிலும் ஏலம் நடைபெற்றது. இதன் மொத்த மதிப்பு ரூ.25 லட் சம் ஆகும். இதில், 16 வியா பாரிகள், 210 விவசாயிகள் பங்கேற்றனர்.

;