அவிநாசி, ஜூன் 17 - அவிநாசியில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதனன்று விவசாயிகளுக்கு காய்ச் சல் பரிசோதனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அரசு அலுவலகங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதனன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டுவருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தினர்.