tamilnadu

விவசாயிகள் தொடர் போராட்டம்: மாவட்ட ஆட்சியர் தீர்வு காண சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், அக். 29- உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட் டுள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டம் துவக்கி யுள்ள நிலையில் இப்பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நியாய மான தீர்வு காண மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப் பட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அக். 28ஆம் தேதி முதல் ஊத்துக்குளி, விஜயமங்க லம் ரோடு, ரெட்டியபாளையம் ராதா அரிசி ஆலை பிரிவு, தாராபுரம் தாலூகா, சங்க ராண்டம்பாளையம் பகுதிகளில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.  

ஏற்கனவே வேளாண் சட்டங்களின் பெயரால் விவசாயிகள் அலைகழிக்கப் பட்டு நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஓரு சில கார்ப்ரேட் நிறுவ னங்களின் லாப வெறிக்காக பவர்கிரீட் நிறு வனம் மூலம் பல்வேறு மோசமான நடை முறைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்ற னர். இதற்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர் துணை போகக் கூடாது. போரா டும் விவசாயிகளின் நியாயமான கோரிக் கைகளை ஏற்க வேண்டும்.  தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத் தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையி லான 765 கிலோவாட் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்திய தந்தி சட்டத்தையும், திட்டத்தையும் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வழக்கு வருகிற நவ. 21ஆம் தேதியன்று சென்னை நீதிமன்றத்தில் இறுதி விசா ரணை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் திட்டப் பணிகளைத் தொடர்வதற்கு திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன் நுழைவு அனுமதி வழங்கக்கூடாது. சுஸ்லான் தனியார் கார்ப்பரேட் நிறு வனத்தின் உயர்மின் கோபுரம் திட்டத்திற்கு  மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெறப் படவில்லை. இருப்பினும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்குப் புறம்பாக முன் நுழைவு அனுமதி வழங்கியுள்ளார். எனவே அந்த முன் நுழைவு அனுமதிகள் ரத்து செய் யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கி றேன் என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.