திருப்பூர், ஆக. 21 – பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் பணி ஓய்வு வயதை 60 என்பதில் இருந்து 58 ஆகக் குறைக்கும் முடிவைக் கண்டித்து பிஎஸ்என்எல் அனைத்து சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதனன்று திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர் குலைக்கும் வகையில் மத்திய அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை எதிர்த்தும், ஓய்வூதிய வயது 60 என்பதில் இருந்து 58 ஆகக் குறைப்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய அரசு மற்றும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் சீர்குலைவுப் போக்கைக் கண்டித்தும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.சுப்பிர மணியம், பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க நிர்வாகி கேசவன் ஆகியோர் உரை யாற்றினர். இதில் அனைத்து சங்க ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் என்எப்பிடி சங்க நிர்வாகி துரைசாமி நன்றி கூறினார்.