அவிநாசி, ஆக. 9- சேவூர் அருகே ஆலத்தூ ரில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே ஆலத்தூர் நல்லகாளிபாளையம் பகு தியில் வசித்து வருபவர் அருக்காணி (75). இவரது கணவர் சுப்பிரமணி, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். உடல் நிலை பாதிக்கப்பட்ட தாய் அருக்காணி, இளைய மகன் மூர்த்தி (45) ஆகிய இருவ ரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலை யில் தாய், மகன் இருவரும் வெள்ளியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டனர். இதுகுறித்து சேவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.