திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.கணேசன் போட்டியிடுகிறார். இந்த ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியைப் பெற்றுத் தருவதற்கும், அவர்களது பல்வேறு கோரிக்கைகளுக்கும் தொடர்ச்சியாக உடனிருந்து போராடி வருவது மார்க்சிஸ்ட் கட்சி. எனவே நூறு வேலை திட்டத் தொழிலாளர்கள் இடுவாய் பழனாள், முத்தாள் ஆகிய இருவரும் தலா ரூபாய் ஆயிரம் வீதம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியை இடுவாய் தியாகி ரத்தினசாமி நினைவகத்திற்கு நேரில் வந்து வேட்பாளர் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் அளித்தனர்.