tamilnadu

img

ஐடிபிஎல் திட்டத்தில் கேட்ட விபரங்களை தராததால் விசாரணையை புறக்கணித்த விவசாயிகள்

திருப்பூர், மார்ச் 5 - திருப்பூர் மாவட்டத்தில் ஐடிபிஎல் திட்டத்தில் பெட்ரோ லிய பொருட்களைக் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் விவ காரத்தில், விவசாயிகள் கோரிய ஆவணங்களை அதிகாரிகள் தராததால், திருப்பூரில் அறிவிக் கப்பட்ட விசாரணையை விவசாயி கள் புறக்கணித்தனர். கோவை அருகே இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்க ளூரு தேவனகுந்தி வரை பெட்ரோ லியப் பொருட்களைக் கொண்டு செல்லும் குழாய்களை விவசாய விளைநிலங்கள் வழியாகப் பதிப்பதற்கு ஐடிபிஎல் நிறுவனத் தினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த குழாய்களை நெடுஞ்சாலை யோரம் கொண்டு செல்ல வேண் டும். விவசாய விளைநிலங்களில் இந்த குழாய்களைப் பதிக்கக் கூடாது என்று திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டத் திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள விவசாயிகளிடம், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவல கத்தில் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்கு சம்பந்தப்பட்ட விவசாயி கள் ஆஜராகும்படியும் இருகூர் - தேவனகுந்தி குழாய் பதிப்புத் திட்ட அதிகாரம் பெற்ற அலுவலர், தனித் துணை ஆட்சியர் புஷ்பா அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி வியாழனன்று ஏராளமான விவசாயிகள் மற்றும் விளைநிலங் களில் ஐடிபிஎல் குழாய் பதிப்புத் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் சங் கத்தினர் திருப்பூர் தெற்கு வட்டாட் சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் வட்டாட்சியர் அலு வலகம் முன்பாக தடுப்பரண்கள் அமைத்து காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். விவசாயி கள், விவசாய சங்க  நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதிக்காமல், அழைப்புக் கடிதம் வைத்திருக் கும் விவசாயிகள் மட்டும் தனித் தனியாக உள்ளே செல்லலாம் என்று கூறினர். இதற்கு  விவசாயிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். விசா ரணை என அழைத்துவிட்டு விவ சாயிகளை அச்சுறுத்தும் வகையில் காவல் துறையையும் குவித்து வைத்துக் கொண்டு, தனித்தனி யாகத்தான் வர வேண்டும் எனச் சொல்வது ஏற்புடையது அல்ல, இது விவசாயிகளை மிரட்டிப் பணிய வைக்கும் கண்துடைப்பு நடவடிக்கை என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.  இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பல்லடம் செயலாளர் வை.பழனிச்சாமி, தற்சார்பு விவ சாயிகள் சங்கத் தலைவர் கி.வே. பொன்னையன் உள்பட ஐடிபிஎல்  திட்டத்தால்  பாதிக்கப்படும் விவ சாயிகள் ஐம்பதுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் தனித் துணை ஆட்சி யர் புஷ்பா மற்றும் இருகூர் - தேவ னகுந்தி திட்ட அலுவலர்கள் வட் டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நுழைவாயிலில் இருந்த விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், முதலில் அழைப்பு இருப்பவர்கள்  மட்டும் வர வேண்டும் என்று சொன்னவர்கள், பின்னர் அவர்க ளுடன் உறவினர்கள், அவர்கள் சார்பானவர்களும் வரலாம் என்ற னர். அதேசமயம் விவசாயிகள், இந்த திட்டம் குறித்து ஏற்கெனவே தாங்கள் கேட்டிருந்த ஆவணங்க ளைத் தரும்படி கேட்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்புத் தெரிவித்தனர். இப்போது விசாரணை மட்டுமே நடைபெறும், உங்கள் கருத்துகள் பதிவு செய்யப்படும் எனக் கூறி னர். இதை ஏற்க மறுத்த விவசாயி கள், இந்த கண்துடைப்பு விசார ணையை ஏற்க முடியாது, குழாய்  பதிப்புத் திட்ட அதிகாரம் பெற்ற  அலுவலர், தனித் துணை ஆட்சி யர் புஷ்பா தாங்கள் கேட்ட ஆவ ணங்களை வழங்கவில்லை என் பதை ஆட்சேப மனுவாகப் பதிவு செய்து அவரிடம் கொடுத்துவிட்டு  விசாரணையைப் புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர். முன்னதாக வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலை தடுப் பரண்கள் கொண்டு காவல் துறை யினர் அடைத்து வைத்து அங்கு  சென்ற பொதுமக்களை விசா ரணை செய்து தனித்தனியாக உள்ளே அனுப்பினர். வாகனங்க ளில் வந்தவர்களை உள்ளே விடா மல், வாகனங்களை வெளியே  நிறுத்திவிட்டு வருமாறு அனுப்பி  வைத்தனர். இந்த கெடுபிடி நட வடிக்கை காரணமாக விவசாயி கள் அதிருப்தி அடைந்தனர்.