tamilnadu

img

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி கருவலூர் அரசு பள்ளி இரண்டாமிடம்

அவிநாசி, டிச. 10- திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற வாலி பால் போட்டியில் கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி  மாணவ, மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர். திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வாலிபால், பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகளில் மூத்தோர், மிக மூத்தோர் பிரிவுகளில் கருவலூர் அரசு பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் மூத்தோர், மிக மூத்தோர் பிரிவு வாலிபால் போட்டியிலும்,  கருவலூர் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. பேட் மிட்டனில் மிக மூத்தோர் இரட்டையர்  பிரிவில் மாவட்டத்தில் முதலிடம், மூத்தோர் பிரிவில் ஒற்றை யர் கலந்து கொள்ளும் போட்டியில் இரண்டாமி டத்தை இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் பெற்றனர். பள்ளிக்கல்வித் துறையினர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து,  மாணவ, மாணவிகளுக்கு கருவலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, உதவி தலைமை ஆசிரியர், காளியப்பன், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன் மற்றும் ஜெபகனி  பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

;