tamilnadu

img

அரசினர் மாணவ, மாணவியர் விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், பிப். 5- காங்கயம் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவி டர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி, ஆதி திராவிடர் மாணவியர் விடுதி, மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஆகிய விடுதிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிரா விடர், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங் கப்படும் உணவுகள் குறித்தும் மற்றும் விடுதி பராமரிப்பு குறித்தும் அலுவலர்களிடம் கேட்ட றிந்தார்.   முன்னதாக, காங்கயம் வட்டத்திற்குட்பட்ட படியூர் கிராம நிர்வாக அலுவலத்தினையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், சிவன் மலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செயல்படும் நியாயவிலைக் கடையினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது காங்கயம் வட்டாட்சியர் ஆ.புனிதவதி உள்ளிட்ட அலுவலர்கள் உடனி ருந்தனர்.

;