திருப்பூர், ஜூன் 8 - மின் சேவைமயப்படுத் துவதாக சொல்லி கருவூலத் துறை அலுவலகங்களை மூட முயற்சிப்பதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வடக்கு வட்டக்கிளை சார்பில் சார் நிலைக் கரு வூலம் முன்பு மதிய உணவு இடைவேளையில் வட்டக் கிளைச் செய லாளர் பி.அம்மாசை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வணிகவரித் துறை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தாமஸ், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க தலைவர் தமிழ் செல்வன் மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். நிறைவாக ராமசாமி நன்றி கூறினார்.