திருப்பூர், நவ. 23- திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங் கள் உள்ளிட்ட சத்துணவு கூடங்களில் கெட்டுப் போன முட்டை விநியோகம் செய்யப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து உணவு பாது காப்பு அலுவலர்கள் ஆய் வில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் குழந்தைக ளுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டுப்போன தாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கு.மரகதம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாக துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.பி.விஜயலலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.மணி ஆகியோர் அங்கேரிபாளையம், அவிநாசிகவுண்டன்பாளையம் பகுதியி லுள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தனர். அங்கு குழந்தைகளுக்கு வழங் கப்பட இருந்த வேக வைத்த முட்டைகள் மற்றும் வேக வைக்கப்படாத முட்டைகளை சோதனையிட்டனர். இதுபோல் நல்ல முட்டைகள் என உறுதி செய்யும் நடவ டிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட் டது.